யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக இலங்கை காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.
அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது , பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் காவல்துறை நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.
முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் காவல்துறை நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண் , இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம் , நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.
பின்னர் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஏமாற்ற தொடங்கியதும், அது தொடர்பில் அந்த பெண் காவல்துறைஉயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.