வாகனம் ஒன்றை பிறருக்கு விற்பனை செய்தால் அவ்வாறு விற்பனை செய்வதை உறுதிப்படுத்துமாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் படிவத்தை முறையாக நிரப்பி தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு மோட்டார் வாகன ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வாகன உரிமையாளருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வாகனம் வாங்கும்போது வாகனத்துக்குரிய முன்பிருந்த உரிமையாளர் அதற்குரிய படிவத்தை உரிமையாளர் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அவ்வாறு முன்பிறுந்த உரிமையாளர் படிவத்தை அனுப்பாமல் வாங்கிய நபர் வாகனத்தை பயன்படுத்தினால் அவர் அதற்கான குற்றத்துக்கு இலக்காகி சிரமப்படுவாார்.
மேலும் இவ்வாறு தவறு செய்யும் வாகன சாரதிகளுக்கு எதிராக 190 பொலிஸ் நிலையங்கள் ஊடாக அபராத சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்