யாழில் நண்பர்களுடன் கிணற்றில் நீராட சென்ற சிறுவன் பரிதாபமாக பலி !




கிணற்றில்  நண்பர்களுடன் நீராடிய சிறுவன்   நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது  .


நெற்கொழு  கழுகு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்   , நேற்று மாலை 2:00 மணியளவில்  கிணற்றில் ஏழு  நண்பர்களுடன் நீராடிய போது  குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,    

கம்பர்மலையை சேர்ந்த  நிரஞ்சன் நிரக்சன்   வயது 17 என்ற சிறுவன்

இவ்வாறு  உயிரிழந்தவர் ஆவார்.


சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைககப்பட்டுள்ளது  மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை