மயானத்தை தேடும் நாகதல்வு கிராமத்தில் வசிக்கும் தமிழர்கள்

                                                                         


மன்னார் மாவட்டத்தில் உள்ள நாகதல்வு கிராமத்தில் வசிக்கும் தமிழர்கள், அந்தப் பகுதியில் உள்ள பொது மயானத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக முறையிட்டுள்ளனர்

அத்துடன் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக வெற்று நிலங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கிராமத்தால் பயன்படுத்தப்பட்ட பொது மயானம் ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கையின் வனவிலங்கு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டது

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர், யுத்தம் முடிவடைந்த போதிலும், மயானம் இன்னும் கிராமத்துக்கு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த வாரம் மன்னாரில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையின் போது வெற்று நிலத்தில் இறுதி சடங்குகள் மற்றும் சடங்குகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்


கருத்துரையிடுக

புதியது பழையவை