யாழில் பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பெண் பலி ! வெளியான முழு விபரம் !

 



யாழில் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவமானது   யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பெண் பேருந்தை விட்டு இறங்கிய வேலையில் பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்தியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதன்பின் அப்பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை