யாழில் கடைக்கு முன்னால் நடந்த அசம்பாவிதம் ; தப்பியோடிய கும்பல் !

 



யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.


நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் கொண்ட குழு மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.



இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.


மானிப்பாய் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

புதியது பழையவை