யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது கப் ரக வாகனம் மோதி விபத்து

 



யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது கப் ரக வாகனம் மோதி விபத்து!


யாழ்ப்பாணம் சாவக்கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்


இன்று மதியம், சாவக்கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.


எனினும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து குறித்தான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை