மன்னார் நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.
கடந்த 02-08-2024 ஆம் திகதி இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து இன்று குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
Tags:
இலங்கை செய்திகள்