வலிகாமம் வடக்கு வசாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ். நகருக்கான பேருந்து சேவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சேவையை இன்று காலை 07 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினையின் அசௌகரியங்கள் குறித்து எடுத்துக் கூறி தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் குறித்த கோரிக்கைக்கு அமைவாக வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.
இந்த பேருந்து சேவை, வசாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வசாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பளை வைத்தியசாலையை அடைந்து கேகேஎஸ் வீதி வழியாக யாழ். நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வறுத்தலைவிளான் சாந்தை சந்தி வரையிலான சேவையை தையிட்டி ஆவளைச் சந்தி வரை நீடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.