யாழ் மானிப்பாய் பகுதியில் வயோதிப மாது ஆடையின்றி சடலமாக மீடகப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிசார் விரைந்த நிலையில் குறித்த சடலம் வயோதிப பெண்ணின் வீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கணவன் பிள்ளைகளை விடுத்து தனியே வசித்து வந்த நிலையில் 63 வயதான சாந்தினி எனும் வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Tags:
இலங்கை செய்திகள்
