யாழில் வீதியில் பயணித்த மாணவர்கள் மீது வாள்வெட்டு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

 



  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில்மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


கருத்துரையிடுக

புதியது பழையவை